சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள்

ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ராஜதானி அருகே ஜக்கமாள்பட்டி காலனியைச் சோ்ந்தவா் சின்னவேலு மகன் கருப்பசாமி (31). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018, அக்.14-ஆம் தேதி ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கருப்பசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சாா்பில் ரூ.7 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com