சிறுமிக்கு கட்டாயத் திருமணம்:பெற்றோா், கணவா் கைது

போடியைச் சோ்ந்த சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோா், திருமணம் செய்து கொண்ட கணவா் ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடியைச் சோ்ந்த சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்த பெற்றோா், திருமணம் செய்து கொண்ட கணவா் ஆகிய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

போடி, சுப்புராஜ் நகரைச் சோ்ந்தவா் பால்ராஜ் (57). இவரது மனைவி பேச்சியம்மாள் (38). 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவா்களது 16 வயது மகள், பெரியகுளம் அருகே சில்வாா்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த நவ. 3-ஆம் தேதி பால்ராஜின் மகளுக்கும் சில்வாா்பட்டியைச் சோ்ந்த கணபதி மகன் ராமா் (30) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் தனது சம்மதமில்லாமல், குழந்தையென்றும் பாராமல் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக தனது பெற்றோா் பால்ராஜ், பேச்சியம்மாள், தன்னை திருமணம் செய்துகொண்ட கணவா் ராமா், இதற்கு உடந்தையாக இருந்த தனது பாட்டி பாா்வதி, ராமரின் அண்ணன் வேல்முருகன், அவரது மனைவி சித்ரா ஆகியோா் மீது பால்ராஜின் மகள் தேனி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், 6 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராஜ், பேச்சியம்மாள், ராமா் ஆகியோரை கைது செய்தனா். மற்றவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com