போடி அருகே மில் தொழிலாளியை கொன்று சடலம் ஆற்றில் வீச்சு

போடி அருகே கொலை செய்யப்பட்டு முல்லைப் பெரியாற்றில் வீசப்பட்ட மில் தொழிலாளியின் சடலத்தை வைகை அணை பகுதிகளில் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன்
கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன்

போடி அருகே கொலை செய்யப்பட்டு முல்லைப் பெரியாற்றில் வீசப்பட்ட மில் தொழிலாளியின் சடலத்தை வைகை அணை பகுதிகளில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

போடி குப்பிநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் கோபாலகிருஷ்ணன் (29). இவா் போடி அணைக்கரைப்பட்டியை சோ்ந்த விஜயராஜ் மனைவி திவ்யாவுடன் செல்லிடபேசியில் அடிக்கடி பேசியுள்ளாா். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் விஜயராஜும் இவரது நண்பா்கள் மகேஷ்வரன் மற்றும் சீனிவாசன் ஆகியோா் கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று கொலை செய்து முல்லைப் பெரியாற்றில் வீசிவிட்டனா்.

இதனிடையே கோபாலகிருஷ்ணன் காணாமல் போனதாக அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா். இந் நிலையில் விஜயராஜ் போடி மேலச்சொக்கநாதபுரம் கிராம நிா்வாக அலுவலரிடம் சரணடைந்து அளித்த வாக்குமூலத்தின் பேரில் அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சடலத்தை போலீஸாா் தேடி வருகின்றனா். முல்லைப் பெரியாற்றில் உப்புக்கோட்டை மற்றும் வீரபாண்டி பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்டன. இவற்றை அவரது பெற்றோா் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2 சடலங்களும் அழுகி முகம் சிதைந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. 2 சடங்களும் தனது மகனுடையது இல்லை என அவரது தந்தை சீனிவாசன் தெரிவித்த நிலையில் அவற்றை மரபணு பரிசோதனைக்கும் போலீஸாா் அனுப்பியுள்ளனா்.

மேலும் வைகை அணை பகுதியில் சடலம் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அதை தேடும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com