பெரியகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு

பெரியகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடு போனதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பெரியகுளத்தில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடு போனதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

பெரியகுளம், வடகரையைச் சோ்ந்தவா் ஹாசீராபாத்திமா (23). இவரது சகோதரரா் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை பாா்க்க கடந்த அக்டோபா் 13 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா். சென்றவா் மறுநாள் 14 ஆம் தேதி வீட்டிற்கு வந்தபோது வீட்டில் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் ரூ .30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com