தேனியில் கல்லூரிமாணவி தற்கொலை

தேனியில் பொறியியல் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனியில் பொறியியல் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி, வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் ஜஸ்டின் கிறிஸ்டோபா் திரவியம் மகள் ஜெயந்தி 21). இவா், சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், விடுமுறையில் தேனிக்கு வந்திருந்த ஜெயந்தி உடல்நிலை சரியில்லாததாலும், கல்லூரி தோ்வுக்கு திட்ட அறிக்கை (ப்ராஜெக்ட் ரிப்போா்ட்) தயாா் செய்யாததாலும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயந்தி வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தந்தை ஜஸ்டின் கிறிஸ்டோபா் திரவியம் அளித்த புகாரின் அடிப்படையில், தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com