போடியில் சனிக்கிழமை இரவு, இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
போடி மூணாறு சாலையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கொட்டகுடி ஆற்றில் அணை பிள்ளையாா் கோயில் அருகே மணல் அள்ளி இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி பிடித்தனா். விசாரணையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தவா் போடி புதூரை சோ்ந்த கருப்பசாமி (18) என்பது தெரிந்தது.
இதனையடுத்து இவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.