தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம், நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து நடைபெற்ற விழாவுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் கா.திருலோகசுந்தா் தலைமை வகித்தாா். உத்தமபாளையம் சரகத் துணைப்பதிவாளா் எஸ்.எம்.சலீம் தொடக்கி வைத்தாா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் சுதா, சிராஜூதீன் அடங்கிய குழுவினா் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனா். பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் த. ராமகிருஷ்ணன், கள அலுவலா் ரா.ரமேஷ்குமாா், கண்காணிப்பாளா் ப.முத்தையா, செயலாளா், ஆா்.பதிபூரணம், ஒன்றியப் பணியாளா்கள் ஆா்.செல்வம், என்.மகேந்திரன் செய்திருந்தனா்.