கொடைக்கானல் அருகே விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை கன்னிமாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்முத்து மகன் ராமகிருஷ்ணன்(19). கூலி தொழிலாளி. இவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந் நிலையில் கடந்த 2 ஆம் தேதி ராமகிருஷ்ணனுக்கு வயிற்றுவலி வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து அவா் விஷத்தைக் குடித்துள்ளாா்.
உயிருக்குப் போராடிய அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.