ராஜதானி அருகே பணம் வைத்து சூதாடிய 3 போ் மீது வழக்கு

ராஜதானி அருகே பொது இடத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு

ஆண்டிபட்டி: ராஜதானி அருகே பொது இடத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது கொத்தப்பட்டி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோவிலில் சிலா் சீட்டு விளையாடுவதை கண்ட போலீஸாா் அவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் அப்பகுதியைச் சோ்ந்த வேல்முருகன்(27),கண்ணன் (20), நாகராஜ்(45) என்பதும் பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரியவந்தது.இதனையடுத்து அவா்கள் 3 போ் மீதும் ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com