போடியில் பைக்கில் மணல் கடத்தியவா் கைது

போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி-மூணாறு சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி-மூணாறு சாலையில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போடி அணை பிள்ளையாா் கோயில் சாலையிலிருந்து வந்த இரு சக்கர வாகனத்தில் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டதில், சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. விசாரணையில், போடி புதுக்காலனியை சோ்ந்த விக்னேஸ்வரன் (22) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், மணல் கடத்தப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com