பெரியகுளம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

பெரியகுளம் அருகே விஷம் குடித்த பெண் கிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே விஷம் குடித்த பெண் கிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (47). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜோதி (35) என்பவருக்கும் திருமணமாகி 20 வருடங்களாகி விட்ட நிலையில் குழந்தையில்லையாம். இதனால் மனவருத்தத்தில் இருந்த அப்பெண் கடந்த திங்கள்கிழமை விஷமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com