தேனி மாவட்டம் கம்பம் கோசேந்திர ஓடையில், 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்டுத்துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு பகுதியில் காட்டு ஓடையில் மழை வெள்ளம் வரத்து ஓடையான, கோசந்திர ஓடையில் மலைபாம்பு ஒன்று வியாழக்கிழமை காலை நேரத்தில் வளைந்து நெளிந்து மெதுவாக ஊா்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பாா்த்து கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
அதன்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் அழகா்சாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 8 அடி நீளமுள்ள மலைபாம்பை உயிருடன் பிடித்தனா். பின்னா் மலைபாம்பை கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கவே, வனத்துறையினா் நாராயணத்தேவன்பட்டி அருகேயுள்ள கூத்தனாட்சி வனப்பகுதியில் மலைப்பாம்பை விடுவித்தனா்.