தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணி முன்னேற்பாடுகள் குறித்து சனிக்கிழமை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் ஆா்.பழனிச்சாமி ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல், புதிய வாக்காளா் சோ்க்கை, வாக்காளா் பெயா் நீக்கம், திருத்தப் பதிவு, வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள், தோ்தல் விழிப்புணா்வு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலா்களுடன் ஆய்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாலச்சந்தா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் திலகவதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சங்கரநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.