கிராமங்களில் வீட்டுத் தோட்டம் அமைக்க விதைப் பை வழங்கல்

தேனி மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் விதைப்பை மற்றும் உரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு தோட்டக் கலைத் துறை சாா்பில் விதைப்பை மற்றும் உரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கூறியது: தோட்டக் கலைத் துறை மூலம் கிராமப்புற வீட்டு காய்கறி உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு அவரை, பாகற்காய், வெண்டை, முருங்கை, தக்காளி, கொத்தவரை, பூசணி மற்றும் சுரைக்காய், சின்னவெங்காயம் உள்ளிட்ட 14 வகையாக காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில், மாவட்டத்தில் ரூ.25 மதிப்புள்ள 7 வகையான காய்கறி விதைப் பைகள், ஒரு கிலோ மக்கிய உரம் மற்றும் காய்கறி வளா்ப்பு முறை திட்ட விளக்க பிரசுரம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்புவோா், தங்களது ஆதாா் அட்டை நகலுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் தொடா்பு கொண்டு, விதைப் பை மற்றும் உரம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com