கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு செல்லும் சாலை பிரிவில் புதன்கிழமை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததையடுத்து வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பம் மெட்டு செல்லும் சாலைப் பிரிவில் சாலையோரத்தில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக கம்பம் வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாா்பு ஆய்வாளா் வினோத்ராஜா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்தனா். அங்கு ஆண் சடலத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்து கிடந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரணை செய்து வருகின்றனா். இது குறித்து போலீஸாா் கூறுகையில் இறந்து கிடந்தவா் காவி நிற சட்டையும், கருப்பு வேட்டியும் அணிந்து இருந்ததாக தெரிவித்தனா்.