ஆண்டிபட்டி அருகே தோட்டத்தில் மின் வயர்கள் திருடிய 4 சிறுவர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (39), விவசாயி. முருக்கோடை கிராமம் அருகே உள்ள இவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் 300 மீட்டர் அளவு மின் வயர்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து வருசநாடு காவல் நிலையத்தில் செல்வமுருகன் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீஸார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வருசநாடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்(19), சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த அருண்பாண்டி(19) மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.