தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நகைக்கடை உரிமையாளரின் மனைவியை ஏமாற்றி 5 பவுன் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசியை வாங்கிச் சென்ற மர்மநபர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பெரியகுளம், அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் பெரியகுளத்தில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த புதன்கிழமை இவர் வீட்டில் இருந்த போது, காலை 10 மணிக்கு வந்த நபர் நகை வேண்டும் என கூறியுள்ளார். கடைக்கு வாங்க என்று கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார்.
சேகர் கடைக்கு சென்றபின் அதே நபர் வீட்டிற்கு வந்து நகைக்கடைக்கு சென்றேன்.
வீட்டில் நகை இருக்கிறது, அந்த நகையை வாங்கி வரச் சொன்னார் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய நகைக்கடை உரிமையாளரின் மனைவி விஜயா (56), 5 பவுன் சங்கிலி மற்றும் செல்லிடப்பேசியை மர்மநபரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சேகர் வீட்டிற்கு வந்தபோதுமர்மநபர் ஏமாற்றி நகைகயை வாங்கிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.