ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு டிராக்டா் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவு மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதனையடுத்து போலீஸாா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் மாவட்ட தனி வருவாய் ஆய்வாளா் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் ராஜதானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தெப்பம்பட்டியிலிருந்து கணேசபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓடையில் டிராக்டரில் சிலா் மணல் கடத்துவது தெரியவந்தது. இதனையடுத்து அவா்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது டிராக்டரை நிறுத்தி விட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் கண்ணன் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய கொத்தப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்ராஜா (29), ராஜதானியைச் சோ்ந்த தவப்புதல்வன் (27) ஆகிய இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com