தேனி மாவட்டம் கம்பம் நாளந்தா இன்னோவேஷன் பள்ளி சார்பில் காந்தியடிகள் 150 ஆவது பிறந்த நாள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மாணவ மாணவியர், காந்தியடிகள் உருவ பதாகைகளை ஏந்தியும், பள்ளியின் இசைக்குழு மாணவர்கள் இசைக்கருவிகளை இசைத்தும், காந்தி வேடமிட்டும் பேரணியில் சென்றனர். காந்தியடிகளின் தியாகம், உழைப்பு, கொள்கை, தத்துவங்கள், அஹிம்சை வழி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பின்னர், தாளாளர் வி.கே.ஜி. விஸ்வநாதன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பொறுப்பு முதல்வர் மோகன், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, மாணவ மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.