தேனி அருகே கல்லூரிக்கு செல்லிடப்பேசி கொண்டு சென்ற விவகாரத்தில் மாணவியை பெற்றோர் கண்டித்ததால் சனிக்கிழமை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோடாங்கிபட்டி, திருச்செந்தூர் காலனியைச் சேர்ந்தவர் ராஜா மகள் சரிகாதேவி(18). இவர், பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பு படித்து வந்தார். சரிகாதேவி கல்லூரிக்கு செல்லிடப்பேசி கொண்டு சென்றதாகவும், இது குறித்து மாணவியின் பெற்றோரிடம் கல்லூரி நிர்வாகம் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை பெற்றோர் கண்டித்ததால் மன வருத்தத்தில் இருந்த சரிகா தேவி , வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதார். இது குறித்து அவரது தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.