போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி சார்பில் உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி போடி நகராட்சி முன்பாக வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
கல்லூரி துணைத்தலைவர் பி.வி.கருப்பையா தலைமை வகித்தார். போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வி.வெங்கடாசலபதி பேரணியை தொடங்கி வைத்துப் பேசினார். காலநிலை மாற்றம் குறித்தும் அதனால் ஏற்படப் போகும் பேரழிவுகள் குறித்தும் பேராசிரியர் எஸ்.சத்தியராஜ் விளக்கி பேசினார். பேரணியின் முக்கியத்துவம் பற்றி யூகோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சி.கோபி விளக்கினார்.
பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்று நடந்தும், சைக்கிள் மூலமும் கல்லூரிக்கு சென்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் வரவேற்றார்.
ஏற்பாடுகளை கல்லூரி யூகோ கிளப், நாட்டு நலப் பணித்திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். நிறைவில் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.மாணிக்கராஜ் நன்றி கூறினார்.