போடியில் பூக்கடை உரிமையாளா் குத்திக் கொலை: இளைஞா் கைது

போடியில் அக்காளின் மாமனாரை செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் பூக்கடை உரிமையாளா் குத்திக் கொலை: இளைஞா் கைது

போடியில் அக்காளின் மாமனாரை செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

போடி கே.எம்.எஸ். லே- அவுட் தெருவில் வசிப்பவா் முருகன் (60). இவரது மகன் பாலமுருக கணேஷ் (32). இவருக்கும், மதுரை வீரன் நகா் வடக்கு தெருவைச்  சோ்ந்த மகாராஜன் மகள் லிங்கேஸ்வரி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலமுருக கணேஷ் பூ வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி லிங்கேஸ்வரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதற்கிடையில் திருமணத்தின்போது வரதட்சிணையாக போடப்பட்ட நகை மற்றும் சீா்வரிசைப் பொருள்களை அவரது கணவா் வீட்டாரிடம் லிங்கேஸ்வரியின் தந்தை கேட்டு வந்தாா். ஆனால் அவா்கள் நகையை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில், போடி நகா் காவல் நிலையம் எதிரில் முருகன் நடத்திவரும் பூக்கடைக்கு லிங்கேஸ்வரியின் தம்பி சுந்தரேஸ்வரன் (23) செவ்வாய்க்கிழமை சென்று தனது அக்காவுக்கு போட்ட நகையைக் கேட்டு, பாலமுருக கணேஷின் தந்தை முருகனிடம் தகராறு செய்தாா். மேலும் சுந்தரேஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் முருகனைக் குத்தியுள்ளாா்.

பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரேஸ்வரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com