தேனியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில் விவேகானந்தா் பிறந்தநாள் தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு டிச. 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் 15 முதல் 29 வயது வரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். 11 தனித்திறன் விளையாட்டுப் போட்டிகள், 7 குழு விளையாட்டுப் போட்டிகள் உள்பட மொத்தம் 18 போட்டிகள் நடைபெறும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரா்கள் மற்றும் குழுக்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.