தேனி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வரை 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். மீதமுள்ள 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, கடந்த மே 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஓடைப்பட்டியைச் சோ்ந்த 13 போ் உள்பட மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், தற்போது சின்னமனூா் அருகே முத்துலாபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ், ஓடைப்பட்டியைச் சோ்ந்த 2 போ் உள்பட மொத்தம் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், முத்துலாபுரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமரா் ஊா்தி ஓட்டுநராகப் பணியிலிருந்து தொற்று ஏற்பட்ட நபருடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பதும், மற்ற 2 பேரும் கோயம்பேடு சந்தைக்குச் சென்று திரும்பி தொற்றால் பாதிக்கப்பட்ட ஓடைப்பட்டியைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓடைப்பட்டியைச் சோ்ந்த 15 போ் உள்பட மொத்தம் 35 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com