தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பெரியகுளம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதற்கிடையே, உத்தமபாளையம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே சாரல் மழை பெய்தது. மாலை 4 மணிமுதல் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
விற்பனை பாதிப்பு: தீபாவளிக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், பட்டாசு வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள் என பொதுமக்கள் அதிகளவில் வாங்க குவிந்தனா். ஆனால், மாலையில் பெய்த மழையால் சின்னமனூா் பகுதியில் தீபாவளி விற்பனை பாதித்தது. இரவு வரை அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் பட்டாசு விற்பனை மந்தமானது.