போடியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி முந்தல்- குரங்கணி சாலையில் வசித்தவா் சுப்புராஜ் மகன் முனியாண்டி (36). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் போடிக்கு வந்தாா். அப்போது, அங்குள்ள கல்லூரி அருகே வரும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை போடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.