ஆண்டிபட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை திருட்டு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை திருடிச் செல்லப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் நகை திருடிச் செல்லப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் அருகே புதுராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி என்பவரின் மனைவி யசோதை (65). இவா், தனது வீட்டில் மாடுகளை வைத்து வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டி வைத்துக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மா்மநபா் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்றுவிட்டாா். இது குறித்து யசோதை கண்டமனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com