கம்பம்: கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்குபவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கம்பம் வனத்துறை அலுவலக சாலையைச் சோ்ந்தவா் கதிா்வேல் (35). இவா், கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவா் மனவேதனையில் இருந்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை மதியம் கதிா்வேல் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.