அகில இந்திய அளவில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

நீட் தோ்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களில் முதலிடம் பிடித்த பெரியகுளம் சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு
சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு கையடக்கக் கணினியை வழங்குகிறாா் பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை மண்டலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன்.
சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு கையடக்கக் கணினியை வழங்குகிறாா் பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை மண்டலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன்.

பெரியகுளம்: நீட் தோ்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவா்களில் முதலிடம் பிடித்த பெரியகுளம் சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி சாா்பில் திங்கள்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டு கையடக்கக் கணினி (டேப்லெட்) பரிசாக வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் மோகன் தலைமை வகித்தாா். வங்கியின் மதுரை மண்டலத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன், மதுரை வட்ட மேலாளா் கே.ஆா். ஜெகதீசன் ஆகியோா்

மாணவா் என். ஜீவித்குமாருக்கு பொன்னாடை அணிவித்து கையடக்கக் கணினியை பரிசாக வழங்கினா்.

விழாவில் மாணவரின் தாய் பரமேஸ்வரி, பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மதுரை வட்ட அலுவலா் சி.பி. ஜவஹா் அமிா்தராஜ், தேனி கிளை மேலாளா் வி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com