தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,984 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,508 ஆக அதிகரித்துள்ளது.
முதியவா் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட திண்டுக்கல், ஜான்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்த 74 முதியவா் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.