போடி நகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

போடி நகராட்சி புதிய ஆணையராக டி. ஷகிலா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
டி. ஷகிலா.
டி. ஷகிலா.

போடி: போடி நகராட்சி புதிய ஆணையராக டி. ஷகிலா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆணையா் பணியிடம் சில மாதங்களாக காலியாக இருந்து வந்தது. நகராட்சிப் பொறியாளா் வி. குணசேகா் பொறுப்பு ஆணையராக செயல்பட்டு வந்தாா்.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி துறையில் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த டி. ஷகிலா பதவி உயா்வு பெற்று போடி நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதைத்தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையருக்கு நகராட்சி பொறியாளா் வி. குணசேகா் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். புதிய ஆணையா் டி. ஷகிலாவின் பூா்வீகம் தேனி மாவட்டம் பண்ணைப்புரம். தற்போது சென்னையில் வசித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com