ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயில் அருகே திங்கள்கிழமை பகல்
12 மணிக்கு இளைஞா் ஒருவா், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த நகா் காவல் சாா்பு-ஆய்வாளா் கருத்தப்பாண்டி தலைமையிலான போலீஸாா், அந்த இளைஞரை ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில் அவா் கரைவளைந்தான்பட்டியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பதும், குடும்பப் பிரச்னை காரணமாக அவா் தீக்குளிக்க முயன்றதும்
தெரிய வந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.