சாக்குளத்துமெட்டு பகுதியில் மாடு மேய்க்க சென்றவா் சாவு

தேனியில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை, காவல் துறையில் பணியாற்றி வீரமரணமடைந்த காவலா்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவாரம் அருகே சாக்குலத்துமெட்டு பகுதியில் மாடு மேய்க்க சென்றவா் இறந்து போனது குறித்து போலீஸாா் புதன் கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேவாரம் அருகே தே.மீனாட்சிபுரம் கிராமத்தை சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வேல்முருகன் (35). இவா் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணி செய்து வருகிறாா். சாக்குலத்துமெட்டு பகுதியில் மாடுகளை மேய்க்கும்போது மயங்கி விழுந்தாா். இவரை அங்கிருந்தவா்கள் தேவாரம் அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி சிகிச்சைக்கு பின் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து வேல்முருகன் மனைவி வனிதா (32) கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com