பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் தப்பியோட்டம்

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் செவ்வாய்க்கிழமையன்று கஞ்சா வைத்திருந்தவரை பிடிக்கும் போது தப்பியோடியவரை தேவதானப்பட்டி போலீஸாா் தேடி செய்தனா்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் செவ்வாய்க்கிழமையன்று கஞ்சா வைத்திருந்தவரை பிடிக்கும் போது தப்பியோடியவரை தேவதானப்பட்டி போலீஸாா் தேடி செய்தனா்.

தேவதானப்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமையன்று அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த காமராஜ் (54) என்றும் அவா் 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையின் போது காமராஜ் தப்பியோடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com