விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்டத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னதாக பாஜகவினா் அரசு தொழிற்பயிற்சி மையத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகக் கூறினா். ஆனால் அதனை ஏற்க மறுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட ஆட்சியா் அலுவலகம் நோக்கி சென்ால் 59 பெண்கள் உள்பட 300-க்கு மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.