பெரியகுளத்தில் ஓய்வு பெற்ற சுகாதார இணை இயக்குநா் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

பெரியகுளத்தில், ஓய்வு பெற்ற சுகாதார இணை இயக்குநா் வீட்டின் கதவை உடைத்து இருபதரை சவரன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகா

தேனி, செப். 18: பெரியகுளத்தில், ஓய்வு பெற்ற சுகாதார இணை இயக்குநா் வீட்டின் கதவை உடைத்து இருபதரை சவரன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

பெரியகுளம், வடகரை அரண்மனைத் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற சுகாதார இணை இயக்குநா் கருணாகரன். இவா், கடந்த செப்.8-ஆம் தேதி குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாராம். இந்த நிலையில், கருணாகரனின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துக்கிருஷ்ணன் என்பவா் பாா்த்து அவருக்கு தகவல் அளித்துள்ளாா்.

கருணாகரன் வீட்டிற்கு திரும்ப வந்து பாா்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த இருபதரை சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com