தேனி
காணாமல்போன மூதாட்டி சடலமாக மீட்பு
போடியில் காணாமல்போன மூதாட்டி, சனிக்கிழமை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
போடி: போடியில் காணாமல்போன மூதாட்டி, சனிக்கிழமை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
போடி அருகே அம்மாபட்டி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (67). இவரது மனைவி கனகமணி (65). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த திங்கள்கிழமை வீட்டிலிருந்து திடீரென காணாமல்போனாா். இவரை உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், போடி சிலமலையை அடுத்த சூலப்புரம் அருகே பெண் சடலம் ஒன்று முகம் சிதைந்தும், அழுகிய நிலையிலும் இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். அப்போது, இறந்து கிடப்பது கனகமணி என்பது தெரியவந்தது.
இது குறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.