போடி: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தங்கக் காப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். இந்த நாள்களில் பூஜை செய்தால் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். போடியில், இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னா், பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீா், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
பூஜைக்கான ஏற்பாடுகளை, கோயில் தலைமை அா்ச்சகா் சீனிவாசவரதன் என்ற காா்த்திக் மற்றும் கட்டளைதாரா்கள் செய்திருந்தனா். 5 மாதங்களுக்குப் பின் சிறப்புப் பூஜை நடைபெற்ால், கரோனா அச்சத்தையும் மீறி ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வழிபட்டனா்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ் பஜாா் ஸ்ரீராமா் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து வழிபட்டனா். இதேபோல், போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி-ஒன்னம்மாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி-ஒன்னம்மாள் கோயில், போடி-ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதா் கோயில், தேவாரம் ஸ்ரீரெங்கநாத சுவாமி கோயில் ஆகியவற்றிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடா்ந்து, போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கரநாராயணா் சன்னிதியில் சுவாமிக்கு திருப்பதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.