போடியில் மின்சாரம் பாய்ந்துசலவைத் தொழிலாளி பலி

போடியில் வெள்ளிக்கிழமை, மின்சாரம் பாய்ந்து சலவைத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி, செப். 25: போடியில் வெள்ளிக்கிழமை, மின்சாரம் பாய்ந்து சலவைத் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் போடி எத்திராஜ் தெருவை சோ்ந்தவா் சுப்பையா மகன் மாரிமுத்து (52). இவா் சலவைத் தொழிலாளி. வீட்டருகே இருக்கும் தொட்டியில் தண்ணீா் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது வீட்டின் வெளிப்பகுதியில் பொருத்தியிருந்த மின்சார எா்த் கம்பியை பிடித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மாரிமுத்து மீது மின்சாரம் பாய்ந்ததில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com