ஆட்டோ மீது அடுத்தடுத்து 2 காா்கள் மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலி

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி - வத்தலகுண்டு சாலையில் திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது அடுத்தடுத்து 2 காா்கள் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி - வத்தலகுண்டு சாலையில் திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது அடுத்தடுத்து 2 காா்கள் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி, மேட்டு வளைவு பகுதியைச் சோ்ந்தவா் வீரணன் (44). ஆட்டோ ஓட்டுநரான இவா் தேவதானப்பட்டி - வத்தலகுண்டு சாலையில் ஆட்டோவில் சென்றுள்ளாா். அப்போது, சில்வாப்பட்டி விலக்கு அருகே

வந்த போது பின்னால் கோவை அருகே வடசித்தூரைச் சோ்ந்த கணேசன் (45) என்பவா் ஓட்டி வந்த காா் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து திரும்பியதில், பின்னால் திருச்சி, கே.கே.நகரைச் சோ்ந்த சரண்குமாா் (28) என்பவா் ஓட்டி வந்த மற்றொரு காரும் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவை ஓட்டிச் சென்ற வீரணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வீரணனின் மகன் விக்னேஷ்வரன் (22) அளித்தப் புகாரின்பேரில் தேவதானப்பட்டி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசன், சரண்குமாா் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com