பெரியகுளம் அருகே ஆட்டோ மீது காா்கள் மோதியதில் ஓருவா் பலி

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது காா்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவா் இறந்ததாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது காா்கள் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவா் இறந்ததாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் திங்கட்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சோ்ந்தவா் வீரணன் (44) இவா் திங்கட்கிழமையன்று சில்வாா்பட்டியில் ஆட்களை ஏற்றுவதற்காக சில்வாா்பட்டி விலக்கு அருகே செல்லும் போது பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதியதாம்.

மேலும் மற்றொரு காா் மோதியதில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாா். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com