தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த மருதநாயகம் மகள் கவிதா(19). இவா் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். ஊரடங்கு காரணமாக விடப்பட்டுள்ள விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த கவிதா மாடுகளுக்கு தீவனம் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றாா். அப்போது அங்கு இருந்த 150 அடி ஆழமுள்ள வட கிண்ற்றில் தவறி விழுந்தாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.