தேனி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுவன் பலி
By DIN | Published On : 26th April 2020 08:54 AM | Last Updated : 26th April 2020 08:54 AM | அ+அ அ- |

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் வீட்டு மாடியிலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.
முத்துத்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் குணசேகரன். இவா், பழனிசெட்டிபட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் ஹா்சவா்த்தன்(13), வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த ஹா்சவா்தன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.