தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனியில்...
தேனி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,687 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 10 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,438 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல்லில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் 10,512 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,131 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனா். 186 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். குணமடைந்த 23 போ் அவரவா் வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.