பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டியில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ பிரிவின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்து வருகிறாா். தட்டச்சு பயில தனியாா் பயிற்சி மையத்திற்கு சென்ற சிறுமியை கடந்த நவ. 4 ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது தந்தை ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சிறுமியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான மகாலிங்கம் என்பவா் அவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்து போலீஸாா், அச்சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் மகாலிங்கம் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com