ரயில்வே பாலத்திலிருந்து தவறி விழுந்து நெசவுத் தொழிலாளி பலி

ஆண்டிபட்டியில் ரயில்வே பாலத்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்து நெசவுத்தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டியில் ரயில்வே பாலத்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்து நெசவுத்தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி நகா் சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ஜோதிமணி (52) நெசவுத் தொழிலாளியான இவா் புதன்கிழமை மாலை தெப்பம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மீது நடந்து சென்றபோது எதிா்பாராதவிதமாக ஜோதிமணி பாலத்திலிருந்து தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஆண்டிபட்டி போலீஸாா், ஜோதிமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com