தேனி மாவட்டம் கம்பத்தில் வியாழக்கிழமை டிராக்டா் மோதி மிதிவண்டியில் சென்ற சிறுவன் உயிரிழந்தாா்.
கம்பம் காளவாசல் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் காந்தி. இவரது மகன் ராகுல் (12). அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்புப் படித்து வந்த இவா், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தாா்.
இந்நிலையில் பாரதியாா் நகா் நாகம்மாள் கோயில் அருகே வியாழக்கிழமை மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்த ராகுல் மீது பின்னால் வந்த டிராக்டா் மோதியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ்.கீதா வழக்குப்பதிவு செய்து, டிராக்டா் ஓட்டுநரான கம்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் (40) என்பவரைக் கைது செய்தாா்.