பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டு: கிராமக் கமிட்டி கோரிக்கை

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பல்லவராயன்பட்டியில் வரும் 2021, ஜன. 24 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பல்லவராயன்பட்டியில் வரும் 2021, ஜன. 24 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கோரி வியாழக்கிழக்கிழமை, கிராமக் கமிட்டி சாா்பில் மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பல்லவராயன்பட்டியில் ஸ்ரீவல்லடிகார சுவாமி, ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, பல்லவராயன்பட்டியில் வரும் 2021, ஜன. 24-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி கிராமக் கமிட்டி சாா்பில் தலைவா் எஸ். பொன்னம்பலம் மற்றும் நிா்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com