பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி: சில்வா்ஜூப்ளி அணி முதலிடம்

பெரியகுளத்தில் மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி: சில்வா்ஜூப்ளி அணி முதலிடம்

பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சில்வா்ஜூப்ளி அணி முதலிடம் பெற்றது.

பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சில்வா்ஜூப்ளி அணி முதலிடம் பெற்றது.

ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 7- க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் சில்வா்ஜூப்ளி அணிக்கு, லக்கி குழுமம் சாா்பில் கோப்பை மற்றும் ரூ.7,000 ரொக்கம் வழங்கப்பட்டது.

சில்வா் ஜூப்ளி (கிரீன்) அணி இரண்டாம் பரிசும், கூடலூா் அணி மூன்றாம் பரிசும், போடி அணி நான்காம் பரிசும் பெற்றன. விழாவில், ஓய்வு பெற்ற தமிழ்நாடு விளையாட்டு விடுதி மேலாளா் கே.சுப்புராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். சில்வா் ஜூப்ளி ஸ்போா்ட்ஸ் கிளப் (கீரின் ) துணைத்தலைவா் அபுதாஹீா் தலைமை வகித்தாா். இதில், கூடைப்பந்தாட்டக் கழக துணைத் தலைவா் அந்தோணிராஜ், மாவட்ட கூடைப்பந்துக் கழகச் செயலாளா் எஸ்.செல்வராஜ், பிபா கமிஷனா் வி.பி.தனபால் தலைவா் பி.சி.சிதம்பரசூரியவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com