குமுளி மலைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

தேனி மாவட்டத்திலிருந்து குமுளி மலைச் சாலை வழியாக கேரளத்துக்குச் சென்றுவருவதற்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடை ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்திலிருந்து குமுளி மலைச் சாலை வழியாக கேரளத்துக்குச் சென்றுவருவதற்கு விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடை ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுகல்-குமுளி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள், குமுளி சாலையில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை குமுளிச் சாலை வழியாக கேரளத்துக்குச் சென்று வர போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நான்கு வழிச்சாலை திட்டப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், குமுளி மலைச் சாலை வழியாக வாகனங்கள் சென்று வருவதற்கான தடை ஜனவரி 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளத்துக்குச் சென்று வரும் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், கம்பம்மெட்டு சாலை வழியாகச் செல்ல வேண்டும் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com